உள்ளூராட்சி மன்றத் தேர்தல்:சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற நடவடிக்கை!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

2022ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமையின் ஊடாக அதற்காக முன்வைக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புற தெரிவித்துள்ளார்.

அந்த வேட்புமனுக்களின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டால் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு வாக்களிக்க முடியாது போகுமென இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புற தெரிவித்தார்.

அதேபோன்று 18 வயது பூர்த்தியடைந்த மேலும் சிலர் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்க முடியாத நிலை ஏற்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...