ஐக்கிய மக்கள் கூட்டணியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இணைவு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைச்சாத்திடவில்லை!

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து செயற்படுவதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது.

இன்று (08) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற மாநாட்டில் இதற்கான ஒப்பந்தத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னிணியின் பொதுச்செயலாளர் ஏ.எல்.எம்.ஷபீல் கைச்சாத்திட்டார்.

இன்று நடைபெற்ற இந்த மாநாட்டில் 8 கட்சிகள் இணைந்த ஐக்கிய மக்கள் கூட்டணி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, மலையக மக்கள் முன்னணி உள்ளிட்ட பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கையொப்பமிடவில்லை.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...