ஒலிம்பிக் போட்டியில் களம் இறங்கும் இலங்கை வீராங்கணை

Date:

பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் வீராங்கணையான தருஷி கருணாரத்ன  பங்கேற்கவுள்ளார்.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டிகள்  இன்று (02) இரவு 11.15 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் தருஷி ஆறாவது ஆரம்ப போட்டியில் பங்குபற்றவுள்ளார்.

குறித்த இந்த போட்டி இலங்கை நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அத்தோடு, இந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டிக்குத் தகுதி பெற்ற வீராங்கனைகளில் தருஷியைத் தவிர மேலும் மூன்று வீராங்கனைகள் ஆசிய பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

அந்த வீராங்கனைகள் பலஸ்தீனம் , குவைத் மற்றும் பஹ்ரைன் நாட்டை சேர்ந்தவர்களெனவும்  தருஷி கலந்து கொள்ளும் ஆறாவது ஆரம்ப போட்டியில் பங்கேற்ற ஒரே ஆசிய வீராங்கனை தருஷி கருணாரத்ன என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...