கல்லொழுவை கடை தெருவில் தீ விபத்து: விசாரணைகள் முன்னெடுப்பு

Date:

மினுவாங்கொடை கல்லொழுவை  பகுதியில்  நேற்று (11) வெடிப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட கடை ஒன்றில் தீ விபத்து  ஏற்பட்டது.

தீ விபத்து தொடர்பில் தகவல் அறிந்தவுடன், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இவ்விபத்து விபத்து தானாக ஏற்பட்டதா அல்லது மின்சார கோளாறால் ஏற்பட்டதா என்பது தொடர்பில் இதுவரை உறுதியாக தெரியவில்லை.

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் சாம்பலாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் வர்த்தகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

(ஏ.சி பௌசுல் அலிம்)

Popular

More like this
Related

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...