கள்எலிய அரபுக்கல்லூரியின் சொத்துக்கள் தொடர்பான விபரங்களை தருமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள்.

Date:

1959 ஆம் ஆண்டு முஸ்லிம் பெண்களுக்காக கட்டாய பாடசாலைக் கல்வியுடன் அரபு மொழி மற்றும் சன்மார்க்க கல்வியை கற்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட கள்எலிய பெண்கள் அரபுக் கல்லூரியின் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு பொதுமக்களுக்கு அறிவுறுத்த இலங்கை வக்பு சபை முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்தவகையில் கல்லூரிக்கு சொந்தமான உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அசையும் அசையா சொத்துக்களின் விபரங்களை முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர்,  இல. 180, முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்  என்ற முகவரிக்கோ அல்லது director@muslimaffairs.gov.lk என்ற  மின்னஞ்சல் முகவரிக்கும் செப்டெம்பர் 3 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு முஸ்லிம் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தகவல் அளிப்பவர் குறித்த எந்த தகவலும் வெளியிடப்பட மாட்டாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...