காசா மீது வான் தாக்குதல் 50 பேர் பலி

Date:

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 50 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேல் – மற்றும் பாலஸ்தீனியர்கள் அதிகம் வசிக்கும் காசா, உள்ளிட்ட பகுதிகள் மீது இஸ்ரேல் இராணுவம் கடந்தாண்டு அக்டோபரில் தாக்குதலை துவக்கியது.

காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‛‛ஹமாஸ்” அமைப்பு இஸ்ரேல் இராணுவத்திற்கு எதிராக போரை நடத்தி வருகிறது. கடந்த 10 மாதங்களாக இந்த போர் நடைபெற்று வருகிறது.

நேற்று ( ஆக.,21) இஸ்ரேல் இராணுவம் காசா மீது திடீரென நடத்திய வான் தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் கடந்த 10 மாதங்களில் இஸ்ரேல் – காசா இடையேயான போரில் இதுவரை 40 ஆயிரத்து 225 பேர் பலியானதாகவும், 92 ஆயிரத்து 981 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...