தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் பாஸில் தெரிவு

Date:

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பப் பீடங்களுள் ஒன்றாக விளங்கும் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் எம்.எம். பாஸில் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கலை கலாசார பீடத்திற்கான பீடாதிபதியாக பணியாற்றிய பேராசிரியர் பாஸிலின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் புதிய பீடாதிபதியினைத் தெரிவு செய்யும் நிகழ்வு நேற்று (15) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது, பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீட் U.L Abdul Majeed தலைமையில் பீடத்தின் கேட்போர் கூடத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிகழ்வில் குறித்த வெற்றிடத்துக்காக பேராசிரியர் எம்.எம். பாஸில் போட்டியிட்டிருந்த நிலையில், இதில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அவர் மீண்டும் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

அத்தோடு, இவர் கடந்த (16) எட்டாவது பீடாதிபதியாக போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

 

 

Popular

More like this
Related

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...