பிரித்தானியாவில் வெடித்துள்ள வன்முறை: பயண எச்சரிக்கை விடுத்துள்ள நாடுகள்!

Date:

பிரித்தானியாவின் பல பகுதிகளில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து பிரித்தானியாவுக்குச் செல்லவேண்டாம் என்று சில நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பிரித்தானியாவிலிருக்கும் தங்கள் நாட்டவர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

பிரித்தானியாவின் பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதனால் பிரித்தானியாவிலுள்ள தங்களது நாட்டவர்களுக்கு சில நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

முதலாவது பயண எச்சரிக்கை விடுத்த நாடாக மலேசியா  லண்டனிலிருக்கும் உயர் ஸ்தானிகர் மூலம், மலேசிய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், பிரித்தானியாவுக்குச் செல்லும் மற்றும் பிரித்தானியாவிலிருக்கும் மலேசிய நாட்டவர்கள், போராட்டங்கள் நடக்கும் இடங்களிலிருந்து விலகியிருக்குமாறும், கவனமாக இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி நடந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

இதனை தொடர்ந்து, கனடாவும் , அவுஸ்திரேலியாவும் பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.
மேலும், சுவிட்சர்லாந்து பயண எச்சரிக்கை விடுக்காமல், தங்கள் குடிமக்கள் போராட்டங்கள் நடைபெறும் இடத்துக்குச் செல்லவேண்டாம் என்றும் வன்முறை வெடிக்கக் கூடும் என்றும், போக்குவரத்துக்கு இடையூறும் தாமதமும் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.

 

 

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...