ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட கூட்டத்திலிருந்து கட்சியின் பிரதிப் பொருளாலரான ஏ.சி.யஹியாகான் வெளியேற்றப்பட்டார்.
முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இன்று கட்சியின் தலைமையமான தாருஸ்ஸலாத்தில் நடைபெற்றது.
இதன்போது , லுஹர் தொழுகைக்கான அதான் ஒலித்த வேளையில், கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், யஹியாகான் எடுத்திருந்த படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்தார்.
விஷமிகளுக்கு கட்சியை அநாகரிகமாக முகநூலில் விமர்சிக்க இடமளித்தமையால் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், அவரை கூட்டத்திலிருந்து வெளியேற்றுவதாக அறிவித்தார் .
கட்சியில் யஹியாகானுடைய வகிபாகம் பற்றி பாராட்டியதோடு , இந்த முடிவை மனவருத்தோடு எடுக்கவேண்டிய நேர்ந்தது பற்றியும் தலைவர் தெரிவித்தார்.
தலைவரின் முடிவுக்குக் கட்டுப்பட்டு, அவருடன் கைகுலுக்கி , முன்மாதிரியான முறையில் யஹியாகான் அங்கிருந்து வெளியேறிச் சென்றார்.