மனித நலன் காக்கும் அறப் பணி: இரத்த தான முகாம் இன்று புத்தளத்தில்

Date:

புத்தளம் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இன்று (13) காலை இரத்த தான முகாமொன்று இடம் பெற்றது.

ரம்ய லங்கா நிறுவனம், ஜமாஅத்தே இஸ்லாமி, புத்தளம் பிரதேச செயலகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த இந்த இரத்ததான நிகழ்வு பிரதேச செயலாளர் சம்பத் வீரசேகர தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதேச செயலக பிரதிப் பணிப்பாளர், பஹன மீடியா நிறுவனத்தின் பணிப்பாளர். அஷ்ஷெய்க்.முஜீப் ஸாலிஹ், ரம்யா லங்கா நிறைவேற்று அதிகாரி டி.எம். அலி சப்ரி, மருத்துவ அதிகாரி வைஸ்னவன் பத்மநாதன், பொது சுகாதார பரிசோதகர் ஜே.ஏ.டி நுவன் ஜயசிங்க, சிலாபம் மற்றும் புத்தளம் பிரதேசங்களுக்கான இரத்த வங்கியின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அங்குரார்ப்பண நிகழ்வில் தலைமையுரையாற்றிய பிரதேச செயலாளர் சம்பத் வீரசேகர,

இரத்த தானம் என்பது ஒரு புண்ணிய காரியம். அதனை சாதாரண விடயமாகக் கருதமுடியாது. பௌத்த தர்மத்தின் பிரகாரம் முன்னைய ஆத்மாவில் நன்மை செய்தவர்கள் தான் இவ்வாறான அறப்பணிகளில் ஈடுபடும் பாக்கியம் கிடைக்கிறது.

இரண்டாவது தடவையாக பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த இப்புண்ணிய நிகழ்வுக்கு ரம்ய லங்கா நிறுவனம் வழங்கும் பேராதரவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என்றார்.

மேலும் ரம்ய லங்கா சார்பில் உரையாற்றிய அலி சப்ரி,

நாடு பூராகவும் தமது நிறுவனம் இவ்வாறான பணிகளில் ஈடுபட்டு வருவதோடு தேசிய இரத்த வங்கிக்கு ரம்ய லங்கா மூலம் வருடாந்தம் ஒரு தொகை இரத்தத்தைப் பெற்று கொடுப்பதாகவும் எதிர்காலத்தில் இரத்த வங்கியோடு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட இருப்பதாகவும் அவர் தெரவித்தார்.

இந்நிகழ்வில் பொதுச்சுகாதார அதிரகரி நுவன் ஜயசிங்கவும் உரையாற்றியிருந்தார்.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...