ரிஷாத் கட்சி சஜித்துக்கு; அங்கத்தவர் பலர் ரணிலுக்கு ஆதரவு!

Date:

 ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எஸ்.எம்.எம். முஷாரப், இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹிம் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள  அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு அவர்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக நாடாளுமன்றம் பிரவேசித்த மூன்று உறுப்பினர்களும்  ரணிலுக்கு  ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.

இதன்படி அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் ஆகியோர் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...