ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எஸ்.எம்.எம். முஷாரப், இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹிம் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு அவர்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக நாடாளுமன்றம் பிரவேசித்த மூன்று உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.
இதன்படி அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் ஆகியோர் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.