ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் உடனடியாக தரையிறக்கப்பட்ட விமானம்

Date:

மும்பையில்(mumbai) இருந்து இன்று (22) காலை வந்த ஏர் இந்தியா(air india) விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

காலை 8 மணியளவில் 135 பயணிகளுடன் விமானம் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலை 8.44 மணியளவில் விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தை நெருங்கியதும் காலை 7.30 மணியளவில் விமானிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து, காலை 7.36 மணிக்கு விமான நிலையத்தில் முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. “இந்த சம்பவத்தால் எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. விமான நிலைய செயற்பாடுகள் தற்போது தடையின்றி உள்ளன,” என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...