ஆசிரியர்களுக்கு ஆரம்பமாகவுள்ள புதிய பயிற்சி நெறிகள்!

Date:

நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய பாடசாலைகளிலிருந்து இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் அளிக்க அரசு அங்கீகாகரம் அளித்துள்ளது.

இது தொடர்பான முன்மொழிவு தொழில்நுட்ப அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்  அமைச்சரவைவில் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டமானது, விஞ்ஞானம் , தொழில்நுட்பம் (Technology), கணிதம் (Methametics), கலை (Arts) மற்றும் கணிதம் ஆகியவற்றைக் குறிக்கும் ஸ்டீம் (STEAM) கருத்தை மையமாகக் கொண்டு கல்வி முறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் கணிதம் போன்ற துறைகளில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களை மாணவர்களுக்கு மேம்பட்ட தரமான கல்வியை வழங்க உதவுவதே குறித்த பயிற்சித் திட்டத்தின் நோக்மாகும்.

அதன்படி, இந்தத் திட்டத்தின் கீழ், அனைத்து மாகாணங்களிலும் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 7,500 ஆசிரியர்களுக்கு மூன்று கட்டங்களாக Skills College of Technology  (SCOT CAMPUS) எனும் நிறுவனத்தின் மூலம் பயிற்சிகள் நடத்தப்ப்படவுள்ளன.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...