உச்ச அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்: சுகாதார அமைச்சில் கடமையேற்ற பிரதமர் ஹரினி அமரசூரிய

Date:

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய சுகாதார அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

நேற்றையதினம் (24) சுகாதார அமைச்சில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்,

சுகாதாரம் என்பது மிக்க முக்கியமான ஒரு விடயமாக நாம் காண்கிறோம். அரசாங்கம் எனும் வகையில் அதற்காக செய்ய வேண்டிய விடயங்களை உச்ச அர்ப்பணிப்புடன் நாம் மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

அரசாங்கம் எனும் வகையில் நோயாளர்கள் மக்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுடன் இணைந்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

இந்நிகழ்வில், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹிபால, விசேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க, பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...