உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அன்பின் செய்தியை கொண்டு செல்லும் மீலாதுன் நபி

Date:

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளான இந்த மீலாதுன் நபி தினமானது உலகினை நேர்வழிப்படுத்த உதவிய நபிகளாரின் போதனைகளை நினைவுகூரும் ஒரு உன்னத தருணமாகும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் அவர்கள் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் சம உரிமை மற்றும் சமத்துவத்தினை வலியுறுத்தும் உன்னதமான கருத்தை அடிப்படையாகக் கொண்டவை. எந்தவொரு நபரும் இனம், சாதி அல்லது நிறம் காரணமாக ஒருவரை விட உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்லர்.

வெறுப்பு மற்றும் மோதல்கள் நிறைந்த யுகத்தில் மனித விழுமியங்களுக்கும் மனிதநேயத்திற்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பங்களிப்பு உண்மையில் நம் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்களைச் சுரண்டுவதை எதிர்த்ததுடன், அடிமைகளின் சுதந்திரத்திற்காகவும் பாடுபட்டார்கள். தொழிலாளர்களின் வியர்வை உலர்வதற்குள் ஊதியம் வழங்க வேண்டும் என்று போதித்தது இதற்கு உதாரணம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளான இத்தினத்தில், உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அன்பின் செய்தியை கொண்டு செல்லும் மீலாதுன் நபியின் மகத்துவம் அன்றாட வாழ்வில் நம் அனைவரையும் வழிநடத்தும் என்று நம்புகிறேன்.

இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...