கஹட்டோவிட்டவில் க. பொ. த சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு

Date:

க. பொ.த சாதாரண தர மாணவர்களை இலக்காகக் கொண்ட இலவச வழிகாட்டல் கருத்தரங்கு 14ஆம் திகதி கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

2006 ஆம் ஆண்டு அல் பத்ரியா மகா வித்தியாலயம் சார்பாக க. பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் குழுவினரால் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வின் வளவாளராக உளவியலாளர் எம். ஐ அஹமட் இப்திகார் அவர்கள் கலந்து கொண்டார்.

அல்பத்ரியா மகா வித்தியாலயம், முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயம், அரபா மகா வித்தியாலயம் மற்றும் ஒக்ஸ்போர்ட் சர்வதேசப் பாடசாலை ஆகிய பாடசாலைகளிலிருந்து சுமார் 100 மாணவ மாணவிகள் இதில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...