கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த மிகப்பெரிய கப்பல்

Date:

மிகப்பெரிய கப்பலான “EVER ARM” கொழும்பு  துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளதாக  இலங்கை துறைமுக அதிகார சபை  தெரிவித்துள்ளது.

குறித்த கப்பலானது, நேற்று (05) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

400 மீற்றர் நீளம், 60 மீற்றர் அகலம் மற்றும் 17.027 மீற்றர் மூழ்கும் தன்மை (கோடை காலத்தில் சரக்குகளை முழுமையாக ஏற்றும் போது கப்பலின் மேலோட்டம் மூழ்கக்கூடிய அதிகபட்ச ஆழம் என்பவற்றை “EVER ARM”  கப்பல் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், செயல்பாட்டு திறன் (கப்பலின் இயங்கும் திறன்) மற்றும் சரக்கு திறன் (கப்பல் எடுத்துச் செல்லக்கூடிய சரக்கின் அளவு) என்பவற்றை மேம்படுத்தும் மேம்பட்ட உந்துவிசை அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, சுமார் 24,000 TEU ( 20 அடி கொள்கலன் ) சுமக்கக் கூடிய இக் கப்பலை ஆசியாவின்  ஒரு சில துறைமுகங்களால் மட்டுமே கையாள முடியும் என கூறப்படுகின்றது. அந்த வரிசையில் கொழும்பு துறைமுகமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...