ஜனாதிபதி அனுர மீது நம்பிக்கை; இணைந்து பணியாற்ற தயார் என ஐ.எம்.எப் தலைவர் உறுதியளிப்பு

Date:

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமைத்துவமானது, இலங்கையின் ஸ்திரத்தன்மையான, வளமான, பாதுகாப்பான அனைவரையும் உள்ளீர்க்கப்பட்ட வளர்ச்சியைப் பாதுகாப்பதற்கு உதவும் என தாம் நம்புவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா (Kristalina Georgieva), புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் IMF வேலைத்திட்டம் உள்ளிட்ட இலங்கையின் அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு இலக்குகளை அடைவதற்கு நிலைபேறான பங்காளியாகவும் பங்குதாரராகவும் தொடர்ந்து பணியாற்றுவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாகவும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளில் இருந்து, இலங்கையை மீட்சிக்கான பாதையில் கொண்டு செல்ல உதவிய கடின வெற்றிகளை தொடர்ச்சியாக கட்டியெழுப்புவதற்கு அநுர குமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து பணியாற்ற சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர நன்மை பயக்கும் உறவை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...