தபால் மூல வாக்களிப்பு: இதுவரையில் 10 மாவட்டங்களில் அனுர அபார வெற்றி

Date:

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள தபால் மூல வாக்களிப்பு முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க முதலிடத்தில் இருக்கின்றார்.

தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின்படி, அவர் 154,657 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அவருக்கு அடுத்தப்படியாக உள்ள சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க 51,982 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 48,970 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இதேவேளை, இதுவரை வெளியாகியுள்ள தபால் மூல வாக்களிப்பு முடிவுகளில் பதினொரு மாவட்டங்களில் பத்து மாவட்டங்களில் அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.

கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தளை, மாத்தறை, மொனராகலை, பொலன்னறுவை, இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அறுரகுமார வெற்றி பெற்றார்.

எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வன்னி மாவட்டத்தில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளார்.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...