நீதிமன்றத்தை அவமதித்த குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்; உயர்நீதிமன்றம்

Date:

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர்  நாயகம் ஹர்ச இலுக்பிட்டிய  நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என உயர்நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

இலங்கையின் விசா வழங்கும் நடைமுறை தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானத்தை இடைநிறுத்தி வைக்குமாறு தான் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாதன் மூலம் குடிவரவுகுடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நீதிமன்றத்தை அவமதித்தார் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஹர்ச இலுக்பிட்டிய மின்னணு பயண அங்கீகார செயன்முறையையை மீள நடைமுறைப்படுத்துமாறு ஆகஸ்ட் 2ம் திகதி உயர்நீதிமன்றம் விடுத்த உத்தரவை நடைமுறைப்படுத்த தவறினார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர்  நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவை நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடையும் வரை நீதிமன்றத்தில் உள்ள சிறைக்காவலில் வைக்குமாறு உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...