புதிய ஜனாதிபதிக்கு சீனா, ஜப்பான் மாலைதீவு உள்ளிட்ட பல நாடுகளின் தலைவா்கள் வாழ்த்து!

Date:

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு பல நாடுகளின் தலைவா்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனா்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவை நேற்று (22)  சந்தித்துள்ளார்.

இதன்போது, இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளமைக்காக அனுரகுமார திஸாநாயக்கவுக்கு இந்திய உயர்ஸ்தானிகள் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திசாநாயக்கவிற்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இரு நாடுகளின் நீண்டகால உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிப்பதாகவும் கூறினார்.

பெய்ஜிங்கில் இருந்து அனுப்பிய செய்தியில் சீன ஜனாதிபதி, 67 ஆண்டுகளுக்கும் மேலாக செழித்தோங்கியிருக்கும் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இராஜதந்திர உறவுகளை எடுத்துரைத்தார்.

இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் விரிவுபடுத்தியுள்ள பரஸ்பர புரிதல் மற்றும் ஆதரவை அவர் பாராட்டினார். பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் சீன பட்டுப்பாதை முன்முயற்சியின் கொள்கைகளில் அடித்தளமாக இருக்கும் மூலோபாய கூட்டுறவு கூட்டாண்மையை ஆழப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை ஜனாதிபதி ஷி ஜின்பிங் வெளிப்படுத்தினார்.

மேலும், சீனா-இலங்கை உறவுகளின் வளர்ச்சிக்கு நான் அதிக முக்கியத்துவம் அளித்து, நமது பாரம்பரிய நட்புறவை கூட்டாக முன்னெடுத்துச் செல்வதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார்.

Popular

More like this
Related

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...