மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான புதிய சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு

Date:

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடிகளைக் கொண்ட சிறுவர்களுக்கான புதிய சிகிச்சை பிரிவு கட்டிடம் செவ்வாய்க்கிழமை (03) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தை நிர்மாணிக்க 150 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படையின் திட்ட முகாமைத்துவம் மற்றும் நிர்மாண பிரிவின் கீழ் 10 மாதங்களில் இதன் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

அபேக்ஷா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் சிறுவர்கள் சிலரின் பங்கேற்பில் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால, அபேக்ஷா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரமேஷ் அருண ஜயசேகர உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...