மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமனம்

Date:

இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  புதிய நீதிபதிகளை நியமித்துள்ளார்.

அதன்படி இந்த நியமனங்கள் இன்று (செப்டெம்பர் 06)முதல் நடைமுறைக்கு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளான கே.எம்.ஜி.எச். குலதுங்க (K.M.G.H. Kulatunga), டி.தொட்டாவத்த (D. Thotawatte), ஆர்.ஏ.ரணராஜா (R.A .Ranaraja) மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எம்.சி.எல்.பி. கோபல்லவ (M.C.L.B. Gopallawa) ஆகியோரே புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 107 வது சரத்தின் கீழ் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு...

இன்று மழை மற்றும் காற்றுடனான வானிலை நிலவும்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடனான வானிலை...

கொழும்பில் நாளை இடம்பெறவுள்ள ‘அல் அகீதா அஸ் – ஸஹீஹா’ நூல் வெளியீட்டு மாநாடு!

இலங்கையிலுள்ள பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவரான அல்-ஆலிம் சி.ஐ.எம். அஸ்மீர்...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து...