வத்தளை அல் அஷ்ரபிய்யா பள்ளிவாசலில் “ஸீரதுர் ரஸூல் நிகழ்ச்சிகள் “

Date:

இஸ்லாமிய கலண்டரின் மூன்றாவது மாதமான ரபிஉனில் அவ்வல் மாதம் முஸ்லிம்கள் மத்தியில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களுடைய சிறப்புக்களை அதிகமாக நினைவு கூருகின்ற, அவருடைய வாழ்வியலை பற்றி பேசுகின்ற, கருத்து பரிமாறுகின்ற இன்னோரன்ன பல நிகழ்வுகளை உள்ளடக்கி சிறப்பு பெற்ற ஒரு மாதமாகும்

இந்த புனித மாதத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

வருடாந்தம் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் கூட இது குறித்த அரச மட்டத்திலான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது வழக்கம்.

அந்தவகையில் பல பள்ளிவாசல்களில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் பற்றிய ஸீரத்துர் றஸுல் பற்றின நிகழ்ச்சிகள் அண்மைக்காலமாக பரவலாக இடம்பெற்று வருகின்றமை பாராட்டுக்குரிய விடயம்.

இதன் வரிசையில் கொழும்புக்கு அண்மையில் உள்ள வத்தளை பகுதியில் அமைந்திருக்கின்ற அல் அஷ்ரபிய்யா பள்ளிவாசலில் இந்த மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிகின்ற இந்த ஸீரத்துர் றஸுல் நிகழ்ச்சி பயனுள்ள பல தலைப்புக்களில் சிறப்பான பல மார்க்க அறிஞர்களுடைய வழிக்காட்டலிலே ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பம்மசமாகும்.

இவ்வாறான நிகழ்ச்சிகளினூடாக இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களைப் பற்றிய சிறப்பான சிறந்த விளக்கங்கள் தெளிவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயன் பெறுவது இக்காலகட்டத்திலே மிக முக்கியமானதொன்று என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...