உயிரிழந்தவர்களை அடக்குவதா? எரிப்பதா என்பதை உயிரிழந்தவரே தீர்மானிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Date:

உயிரிழந்த பின்னர் ஒவ்வொரு நபரின் உடலங்களையும் அகற்றுகின்ற விதம் தொடர்பாக தீர்மானிக்கின்ற உரிமையை குறித்த நபருக்கே வழங்குவதற்காகவும் தனது உடலத்தை அகற்ற வேண்டிய விதம் பற்றிய விருப்பத்தை தெரிவிக்காதவர்கள் உயிரிழக்கின்ற போது உயிரிழந்தவரின் அபிலாஷைகள் மற்றும் மத ரீதியான கலாசார அல்லது தனிப்பட்ட நம்பிக்கைகளை கருத்தில்கொண்டு உயிரிழந்தவரின் உடலத்தை நல்லடக்கம் செய்யவேண்டுமா அல்லது தகனம் செய்யவேண்டுமா என்பதை தீர்மானிக்கும் உரிமை அந்நபரின் நெருங்கிய உறவினருக்கு ஒப்படைக்கின்ற வகையில் ஏற்பாடுகளை செய்வதற்காக சட்ட வரைஞரால் தாயரிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளதாக செவ்வாயன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் நீதி சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த ஒருங்கிணைவு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...