ஐ.நா: காசாவை விட்டு இஸ்ரேல் வெளியேறும் தீர்மானம்!

Date:

பலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதை 12 மாதங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில் 124 நாடுகளின் ஒப்பந்தத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த பிரேரணைக்கு எதிராக 14 நாடுகள் வாக்களித்துள்ளதுடன், 43 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தன.

இஸ்ரேல் தொடர்ந்து சர்வதேச போர் விதிகளை மதிக்காமல் காசா மீது தாக்குதலை நடத்தி வரும் நிலையில், காசாவை விட்டு வெளியேற வேண்டும் என்று பாலஸ்தீனம் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராகவே வாக்களித்துள்ளது.

தீர்மானத்திற்கு பெரும்பாலான நாடுகளின் ஆதரவு கிடைத்திருந்தாலும், இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை நிறுத்துவதற்கான முயற்சியை எடுக்காது என்பது இஸ்ரேலின் நடவடிக்கை மூலம் நமக்கு தெளிவாக தெரிகிறது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...