குழந்தைகளின் கல்லீரலுக்கு ஏற்படும் பாதிப்பு: வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

Date:

அறியாமல் குழந்தைகளுக்கு பரசிட்டமால் அதிக அளவு கொடுப்பதன் காரணமாக குழந்தைகளின் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தேசிய நச்சு தகவல் மையத்தின்  தலைவர் வைத்தியர் ரவி ஜயவர்தன வலியுறுத்தியுள்ளார்

மேலும் வைத்தியரின் பரிந்துரைகளில் பரசிட்டமால் இருந்தால் மட்டுமே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் எனினும் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் போது அதிக அளவு பரசிட்டமால் கொடுக்கப்படுவதால் குழந்தைகளின் நிலைமை  மேலும் மோசமான  நிலைமைக்குள்ளாகும் வாய்ப்புள்ளதாகவும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டார்.

சில பெற்றோர்கள் காய்ச்சலை கண்டறிந்தால் பரசிட்டமாலை அதிக அளவில் கொடுக்கின்றனர். இவர்களுக்கு மருத்துவ ஆலோசனைப்படி திட்டமிடப்பட்ட அளவை வழங்க அறிவுறுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் குழந்தைக்கு பரசிட்டமால் மருந்து கொடுக்க வேண்டுமா என்றும், மேலும் குழந்தைக்கு கூடுதல் டோஸ் பரசிட்டமால் கொடுக்க வேண்டுமா என்று கட்டாயம்  மருத்துவ ஆலோசனையை பெறவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக ஏதேனும் மேலதிக ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள 0112 686 143 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...