2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர்,
“சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அந்தப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட தயாராக உள்ளோம். எனது நோக்கம் மிக விரைவில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட வேண்டும் என்பதேயாகும்.
இறுதி முடிவுகளின் தயாரிப்பு இன்னும் சில நாட்கள் செல்லும் என்று நான் நினைக்கிறேன். எவ்வாறாயினும் பெறுபேறுகளை செப்டம்பர் மாதத்திற்குள் வெளியிடுவோம் என்றார்.