2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று அதிகாலை (28) வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பரீட்சார்த்திகள் தமது பெறுபேறுகளை அணுக முடியும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் விசாரணைகளை மேற்கொள்ள விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு பரீட்சை திணைக்களம் கேட்டுக்கொள்கிறது: 1911 அல்லது 011 2 785 922, 0112 786 616, 011 2 784 208 அல்லது 011 2 784 537.
சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் 01 முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.