தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய மக்கள் சக்தி வேண்டுகோள்

Date:

2024 ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியாவதில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் பணிகளைச் செய்ய தேர்தல் ஆணையமும் தொடர்புடைய அதிகாரிகளும் பணியாற்றுவார்கள் என நம்புவதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் பணியாற்றுவார்கள் என நம்புகிறோம்.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பொது அமைதியை பாதுகாக்கும் நோக்கில் மட்டுமே இரவு நேர ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில், நாட்டில் உச்சபட்ச அமைதியான சூழலைப் பேணுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்புப் பிரிவினரைக் கேட்டுக்கொள்வதுடன்,  நாட்டில் அமைதியைப் பேணுவதற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறோம் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...