தேர்தல் நாளில் பொது போக்குவரத்தில் நெருக்கடி ஏற்படும்: வெளியான அறிவிப்பு

Date:

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்களுக்காக 200 கோடி ரூபாவிற்கும் மேல் பேருந்துகளுக்காக செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 100 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (17)  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நாளைய தினம் நடைபெறவுள்ள கடைசி பொதுக் கூட்டங்களுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் குழுக்கள் சுமார் 1500 பேருந்துகளுக்கு ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி அதிக பேருந்துகளை பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக நாடு முழுவதும் சுமார் 500 பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் 20ஆம் திகதி தேர்தல் காரணமாக சுமார் 50 வீத பேருந்துகள் பொது மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தேர்தல் நடைபெறும் 21ம் திகதி 10 முதல் 15 வீதம் வரையான பேருந்துகளே சேவையில் ஈடுபடும். அன்றைய தினம் நீண்ட தூர சேவை பேருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...