நபிகளாரின் ஒழுக்க விழுமிய வாழ்வு சிறுபான்மை முஸ்லிம்களுக்கு நல்லதொரு முன்மாதிரி

Date:

தேசிய ஷூரா சபையின் மீலாத் செய்தி;

“நபியே நீர் மகத்தான பண்பாடுகளோடு இருக்கிறீர்” (அல்குர்ஆன்)

நபிகளார் (ஸல்) அவர்கள் தனது நுபுவத்துக்கு முன்னரான மக்கா வாழ்க்கையில் ஒழுக்க விழுமியங்களுடன், உயர் பண்பாடுகளோடு வாழ்ந்து வந்தார்கள்.

அவர்களை மறுத்து, எதிர்த்து வந்தவர்கள் கூட அன்னாரது நற்குணங்களுக்கு சான்று பகர்ந்தார்கள். இது சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் சமூகத்திற்கு நல்லதொரு முன்மாதிரியாகும்.

நபியவர்கள் தனக்கு நபித்துவம் கிடைப்பதற்க்கு முன்னரே வாய்மை, உண்மை, தைரியம், பொறுமை, சமூக சேவை, மனித சமுதாயத்தின் மீதான அக்கறை, பாவங்களில் இருந்து முற்று முழுதாக தூரமாக இருந்தமை இனபந்துக்களுடனான இறுக்கமான உறவு, அயல் வீட்டாருக்கான உரிமைகளை வழங்குவது போன்ற அடிப்படை பண்புகளோடு வாழ்ந்து வந்தார்கள்.

“ஒழுக்க விழுமியங்களை பரிபூரணப்படுத்தவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்” என நபி(ஸல்) கூறினார்கள்.

இதனால் அவர்கள் முன்வைத்த தூது அந்த மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. இஸ்லாம் என்றாலே பண்பாடுகள் தான் என்ற கருத்து வலுப்பெற்றது.

சிறுபான்மையாக இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் நபியவர்களது இந்த அடிப்படையான பண்புகளை கைக்கொள்வதற்கு இந்த சந்தர்ப்பத்தில் திடசங்கற்பம் பூணவேண்டும்.

அல்லாஹ்வின் அருள் கிட்டுவதற்கும், பிற சமூகங்களது நன்மதிப்பை வென்று வாழ்வதற்கும், சமூக ஸ்திரப்பாட்டுக்கும் நபியவர்களது இந்தப் பண்புகளை அனைவரும் முன்மாதிரியாகக் கொள்வது அவசியமாகும்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...