நாட்டின் பல பகுதிகளிலும் மீலாத் தின நிகழ்வுகள் அனுஷ்டிப்பு.

Date:

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் மீலாத் தின சிறப்பு நிகழ்வுகள் இன்று (16)  இடம்பெறுகின்றன.

அந்தவைகயில் பேருவளை, சீனன்கோட்டை தரீக்கதுல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் ரபிய்யுல் அவ்வல் மாதத்தை சிறப்பிக்கு முகமாக 12 தினங்கள் மௌலீத் ஓதும் நிகழ்வு பத்தை ஸாவியா லேனில் வெகுவிமர்சையாக நடைபெற்றுவருகிறது. இந்நிகழ்வில் சுப்ஹான மௌலீத் ஓதப்படுவதுடன் தமாம் மஜ்லிஸ் இன்று இரவு வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.

அதேநேரம் பறகஹதெனிய, ஜாமிஉல் அன்வர் பெரிய பள்ளிவாசலின் வருடாந்த மீலாதுன் நபி தின போட்டி நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா இன்று பறகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பெரியபள்ளி வாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஷாதுலியாத் தரீக்காவின் தலைமையகமான கொழும்பு உம்மு ஸாவியாவில் 122ஆவது வருட புனித ‘சமாயி லுத் திர்மிதி பாராயண மஜ்லிஸ்’ தமாம் வைபவம் இன்று (16)  நடைபெறும்.

இதேவேளை பேருவளை முஸ்லிம் வியாபாரிகள் ஒன்றிணைந்து வருடாந்தம் நடாத் தும் மீலாத் விழா மற்றும் மௌலித் மஜ்லிஸ் இன்று பேருவளை நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் மேல் மாடியில் நடைபெறும்.

முகத்தமுஷ் ஷாதுலி முர்தாஜ் ஸமீம் பொறுப்பாக இருந்து நடாத்தும் நிகழ்வில் உலமாக்கள், வர்த்தகர்கள். மத்ரஸா மாணவர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இன உறவை கட்டியெழுப்பும் வகையில் ஏனைய சமூகங்களையும் அழைத்து இவ்விழாவை சிறப்பாக நடாத்த வர்த்தகர்கள் ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக முர்தாஜ் ஸமீம் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...