நாட்டின் பல பகுதிகளிலும் மீலாத் தின நிகழ்வுகள் அனுஷ்டிப்பு.

Date:

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் மீலாத் தின சிறப்பு நிகழ்வுகள் இன்று (16)  இடம்பெறுகின்றன.

அந்தவைகயில் பேருவளை, சீனன்கோட்டை தரீக்கதுல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் ரபிய்யுல் அவ்வல் மாதத்தை சிறப்பிக்கு முகமாக 12 தினங்கள் மௌலீத் ஓதும் நிகழ்வு பத்தை ஸாவியா லேனில் வெகுவிமர்சையாக நடைபெற்றுவருகிறது. இந்நிகழ்வில் சுப்ஹான மௌலீத் ஓதப்படுவதுடன் தமாம் மஜ்லிஸ் இன்று இரவு வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.

அதேநேரம் பறகஹதெனிய, ஜாமிஉல் அன்வர் பெரிய பள்ளிவாசலின் வருடாந்த மீலாதுன் நபி தின போட்டி நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா இன்று பறகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பெரியபள்ளி வாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஷாதுலியாத் தரீக்காவின் தலைமையகமான கொழும்பு உம்மு ஸாவியாவில் 122ஆவது வருட புனித ‘சமாயி லுத் திர்மிதி பாராயண மஜ்லிஸ்’ தமாம் வைபவம் இன்று (16)  நடைபெறும்.

இதேவேளை பேருவளை முஸ்லிம் வியாபாரிகள் ஒன்றிணைந்து வருடாந்தம் நடாத் தும் மீலாத் விழா மற்றும் மௌலித் மஜ்லிஸ் இன்று பேருவளை நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் மேல் மாடியில் நடைபெறும்.

முகத்தமுஷ் ஷாதுலி முர்தாஜ் ஸமீம் பொறுப்பாக இருந்து நடாத்தும் நிகழ்வில் உலமாக்கள், வர்த்தகர்கள். மத்ரஸா மாணவர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இன உறவை கட்டியெழுப்பும் வகையில் ஏனைய சமூகங்களையும் அழைத்து இவ்விழாவை சிறப்பாக நடாத்த வர்த்தகர்கள் ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக முர்தாஜ் ஸமீம் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...