புதிய ஜனாதிபதிக்கு சீனா, ஜப்பான் மாலைதீவு உள்ளிட்ட பல நாடுகளின் தலைவா்கள் வாழ்த்து!

Date:

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு பல நாடுகளின் தலைவா்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனா்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவை நேற்று (22)  சந்தித்துள்ளார்.

இதன்போது, இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளமைக்காக அனுரகுமார திஸாநாயக்கவுக்கு இந்திய உயர்ஸ்தானிகள் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திசாநாயக்கவிற்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இரு நாடுகளின் நீண்டகால உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிப்பதாகவும் கூறினார்.

பெய்ஜிங்கில் இருந்து அனுப்பிய செய்தியில் சீன ஜனாதிபதி, 67 ஆண்டுகளுக்கும் மேலாக செழித்தோங்கியிருக்கும் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இராஜதந்திர உறவுகளை எடுத்துரைத்தார்.

இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் விரிவுபடுத்தியுள்ள பரஸ்பர புரிதல் மற்றும் ஆதரவை அவர் பாராட்டினார். பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் சீன பட்டுப்பாதை முன்முயற்சியின் கொள்கைகளில் அடித்தளமாக இருக்கும் மூலோபாய கூட்டுறவு கூட்டாண்மையை ஆழப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை ஜனாதிபதி ஷி ஜின்பிங் வெளிப்படுத்தினார்.

மேலும், சீனா-இலங்கை உறவுகளின் வளர்ச்சிக்கு நான் அதிக முக்கியத்துவம் அளித்து, நமது பாரம்பரிய நட்புறவை கூட்டாக முன்னெடுத்துச் செல்வதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...