புத்தளம் மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கான விசேட செயலமர்வு..!

Date:

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்கான பணிகளில் பல அமைப்புக்கள் மும்முரமாக செயற்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இலங்கையின் பழமை வாய்ந்த தேர்தல் கண்காணிப்பு நிலையமான “பெப்ரல்” அமைப்பு, புத்தளம் மாவட்டத்தில் தபால் வாக்களிப்புக்கான தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக தெரிவு செய்யபட்டவர்களுக்கான ஒரு முழுநாள் பயற்சி பட்டறை இன்று புத்ததளம் ரம்ய லங்கா நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முக்கிய வளவாளராக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் திரு. தினேஷ் பெரேரா கலந்து கொண்டு தேவையான பயிற்சிகளை வழங்கியதோடு , மாவட்ட ‘பெப்ரல்’ ஒருங்கிணைப்பாளர் திரு, ருமைஷ் , கள ஒருங்கிணைப்பாளர் தரிந்து ஆகியோரும் வளவாளர்களாக கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினார்கள்.

நடைபெறவிருக்கின்ற இத் தேர்தலை மிக சிறப்பாக கண்காணிக்கும் வகையில் பெப்ரல் அமைப்பு முழுமையான ஏற்பாட்டை செய்துள்ளது.

மாவட்டத்தில் இருக்கின்ற சகல தேர்தல் தொகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய வகையில், தெரிவு செய்யப்பட்ட கண்காணிப்பாளர்களுக்கு இன்று அதற்கான நியமனங்கள் வழங்கப்பட்டதோடு, அவர்கள் எவ்வாறு தேர்தல் பணியில் ஈடுபடுவது என்பது தொடர்பான பயிற்சிகளும் டிஜிட்டல் ஊடாக எவ்வாறு தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வது என்பதற்கான முன்மாதிரி பயிற்சிகளும் இன்றைய நிகழ்வில் செயற்படுத்திக் காட்டப்பட்டது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...