புத்தளம் மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி 08 நிலையங்களில் ஆரம்பம்

Date:

புத்தளம் மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி 08 நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட தேர்தல் அதிகாரி எச்.எம்.எஸ்.பி ஹேரத் தெரிவித்துள்ளார்

இதேவேளை மாத்தளை மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட தேர்தல் அதிகாரி தேஜானி திலகரத்ன தெரிவித்தார்.

அத்துடன் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முதலாவது முடிவை இன்று நள்ளிரவு வெளியிட முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தற்போது மாவட்ட ரீதியாக அஞ்சல் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கமைய நாடளாவிய ரீதியில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...