புத்தளம் மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி 08 நிலையங்களில் ஆரம்பம்

Date:

புத்தளம் மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி 08 நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட தேர்தல் அதிகாரி எச்.எம்.எஸ்.பி ஹேரத் தெரிவித்துள்ளார்

இதேவேளை மாத்தளை மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட தேர்தல் அதிகாரி தேஜானி திலகரத்ன தெரிவித்தார்.

அத்துடன் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முதலாவது முடிவை இன்று நள்ளிரவு வெளியிட முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தற்போது மாவட்ட ரீதியாக அஞ்சல் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கமைய நாடளாவிய ரீதியில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

Popular

More like this
Related

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...