ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவின் தலைமைக் கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் மதத்தலைவர்களை இன்று (2) சந்தித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணி குழுவினர் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கண்காணிப்பு பணிக்காக இலங்கை வந்துள்ளனர்.
இந்நிலையில், பிரதான கண்காணிப்பாளர் கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் (Nacho Sánchez Amor) உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணி குழுவின் உறுப்பினர்கள் இலங்கையின் தனித்துவமான கலாசாரம் மற்றும் பன்முகத்தன்மை பற்றி இலங்கையில் உள்ள முக்கிய மத தலைவர்களை சந்தித்து, கலந்துரையாடி சிறந்த விளக்கங்களை பெற்றுக்கொண்டனர்.