முஸ்லிம் சமூகம் எவ்வாறு தேர்தலை எதிர்கொள்வது?; கொழும்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் செயற்பாடுகளை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்பது தொடர்பிலான செயலமர்வொன்று அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தினால் கடந்த ஞாயிறன்று (1) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் உப தலைவர் பௌசர் பாரூக் தலைமையில் கொழும்பில் நடந்த இந்தச் செயலமர்வில் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முஸ்லிம் சமூகம் முன்வைக்க வேண்டிய பல கோரிக்கைகளை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் எடுத்துக் காட்டினார்.

அத்துடன் கடந்த கால தேர்தல் அனுபவங்களை முன்னாள் கொழும்பு மாநகர மேயர் ஒமர் காமில் பகிர்ந்து கொண்டார்.

நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களின் தற்போதைய நிலை தொடர்பிலான கள ஆய்வொன்றும் சபையில் முன்வைக்கப்பட்டது.

Popular

More like this
Related

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...