மூன்றாவது முறையாகவும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வி

Date:

நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்பார்க்கப்பட்டது போல எவரும் 50 வீதம் மற்றும் வாக்கினை பெறாததால் 2ஆவது வாக்கெண்ணும் நடைமுறைக்கு செல்வதென தேர்தல்கள் ஆணையாளர் தேர்தல் சட்டத்தின் கீழ் தீர்மானித்திருக்கின்றார்.

அந்த வகையில் 39 வீதம் பெற்ற அனுரகுமாரவும் 34 வீதம் பெற்ற சஜித் பிரேமதாசவும் போட்டியில் தொடர்ந்து நிலைத்திருப்பர்.

ஏனைய 36 வேட்பாளர்களும் தோல்வியடைந்தவர்களாக கருதப்படுவார்கள் என தேர்தல்கள் ஆணையாளர்கள் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசங்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தவராகக் கருதப்படுகிறார். இது இவர் ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு தோல்விடைகின்ற 3ஆவது சந்தர்ப்பமாகும்.

போட்டியில் தொடர்ந்து இருக்கின்ற சஜித் பிரேமதாசவும் அனுரகுமார திசாநாயக்க இருவருக்குமிடையில் நடைபெறும் விருப்பு வாக்கு இடையில்  விருப்பு வாக்குகளை எண்ணியதன் பின்  இருவரில் அதிக வாக்குகளை பெறும் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவர்.

Popular

More like this
Related

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா,...

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...