IMF இல்லாமல் எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: மாலைதீவு வெளிவிவகார அமைச்சர்

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியின்றி நாட்டின் நிதிச் சவால்களை தீர்க்க முடியும் என்று மாலைதீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் வங்கிகளுடனும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

தமது நாடு எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சினைகள் தற்காலிகமானவை என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியை நாட வேண்டிய அவசியமில்லை என்றும் மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் தெரிவித்துள்ளார்.

கையிருப்பு குறைந்து வருவதால் தற்போது மாலைத்தீவு தற்காலிக சிக்கலை எதிர்கொண்டுள்ளதாகவும் வெளிப்புற நிதி தலையீடு இல்லாமல் அதைத் தீர்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் மூலோபாயத்தில் வரி முறை சீர்திருத்தம், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் செலவுகளைக் குறைத்தல், சீனா மற்றும் இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் போன்றவை உள்ளடங்கும் என வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...