“‘இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்’ : அல்-பலாஹ் மாணவர்களுக்கு தலைமைத்துவ வழிகாட்டல் நிகழ்வு”

Date:

குவைத்தை மையமாக் கொண்டு இயங்கும் இலங்கை மாணவர்கள் ஒன்றியம் ‘இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்’ எனும் தொனிப் பொருளில் நீர்கொழும்பு, பலகத்துறை அல்-பலாஹ் கல்லூரியில் தலைமைத்துவ மற்றும் ஆலோசனை வழிகாட்டல் நிகழ்வொன்றினை அண்மையில்  (31.08.2024) நடத்தியது.

இந்நிகழ்வின் வளவாளர்களாக Dr. ரிஷாட் புஹாரி மற்றும் அஷ்-ஷெய்க் எம்.டீ .எம். நுஸ்ரத் (நளீமி) கலந்துகொண்டனர்.

கல்லூரி அதிபர் அஷ்-ஷெய்க் எம்.யூ. பாயிஸ் (நளீமி), பாடசாலையின் பிரதி அதிபர்கள் எம்.எம்.எம். சதீஸ்கான், ஷஹாமா மொஹமட், மற்றும் உறுப்பினர்களும் இநிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

தரம் 11, 12, 13 ஆகிய மாணவர்களுக்கான இம் முழுநாள் நிகழ்வில் பகல் போசனம் மற்றும் மாலை நேர தேநீர் உபசாரம் போன்றவையும் வழங்கப்பட்டது.


தகவல்: அனஸ் அப்பாஸ்

1 COMMENT

Comments are closed.

Popular

More like this
Related

ஐரோப்பிய வாகன இறக்குமதிக்கு 25% வரி; டிரம்ப் அறிவிப்பு

வர்த்தக ஒப்பந்தங்களில் முழுமையான உடன்பாடு எட்டப்படாததால், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்...

ஹஜ் யாத்திரையை முன்னிட்டு முதலாவது குழு சவூதி பயணம்!

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரையை முன்னிட்டு, 325 யாத்திரிகர்களைக் கொண்ட...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...