கத்தாரிலிருந்து உம்ராவுக்கு சென்ற புத்தளம் குடும்பம் விபத்து: கர்ப்பிணி தாயொருவர் பலி

Date:

புத்தளம் பகுதியைச் சேர்ந்த முஹம்மது முபாரிஸ் மற்றும் அவரது குடும்பம், கத்தாரிலிருந்து உம்ராவிற்கு சென்று திரும்பும் வழியில் இடம்பெற்ற, கார் விபத்தில்  முபாரிஸின் கர்ப்பிணி மனைவியான பாத்திமா ஷாபாரிஜ் (33) உயிரிழந்துள்ளார்.

சவூதி- கத்தார் எல்லையான சல்வா பகுதியில் கடந்த 28ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் கர்ப்பிணி தாயும் வயிற்றில் இருந்த குழந்தையும் மரணமடைந்தனர். ஏனையவர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகனம் ஓட்டும் போது சாரதி தூங்கியதாலே இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த கர்ப்பிணி தாயின் உடல் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு இன்று (30) அடக்கம் செய்யப்படும்.

 

 

Popular

More like this
Related

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...

சீரற்ற வானிலை: உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த....

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...