காசாவில் பாடசாலை மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்: சவூதி வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனம்

Date:

காசா பகுதியிலுள்ள பலஸ்தீனிய அகதிகள் அடைக்கலம் புகுந்திருந்த பாடசாலை ஒன்றைக் குறிவைத்து தாக்கிய இஸ்ரேலிய படைகளின் இழிச் செயலை சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சு கடுமையாக கண்டிக்கிறது.

இதனால் அப்பாடசாலையில் இருந்த பலர் உட்பட ஐநா ஒனர்வா ஊழியர்கள் பலரும் பலியானனர்.

சவூதி அரேபியா, இவ்வன்முறையை நிறுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதுடன், அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் இத்தகைய மனிதாபிமான மீறல்களை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றும் கோருகிறது.

மேலும், இஸ்ரேல் செய்யும் இவ்வத்து மீறல்களை கேள்விக்குட்படுத்த சர்வதேச சமூகம் முன் வர வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றது.

காசாவில் உள்ள மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் நடாத்திய தாக்குதலில் சுமார் 18 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.நா சபையினால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இயங்கிவந்த பாடசாலை மீதே இவ்வாறு தாக்குதல் நாடத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...