குரங்கு காய்ச்சல் நோய் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Date:

எம் பொக்ஸ் (mpox) எனப்படும் குரங்கு காய்ச்சல் நோய் தொடர்பில் அவதானத்துடன் இருப்பதாக  இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் குரங்கு காய்ச்சல் நோய் அறிகுறியுடன் முதலாவது நபர் நேற்று (9) அடையாளங்காணப்பட்டுள்ளார்.

மேலும், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரது நோயின் தன்மை குறித்துத் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்தே வருவதால் இந்த நோய் தொடர்பில் அவதானத்துடன் இருப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த நோய் தொடர்பில் முன்னெச்சரிக்கையாக இருப்பதால் சமூகத்திற்கு நேரடியாகப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குரங்கு காய்ச்சல் தொடர்பில் விமானநிலையங்கள் மற்றும் முக்கியமான சுற்றுலாத்தளங்களிலும் அவதானிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...