ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதத்துக்கான திகதி அறிவிப்பு

Date:

ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதத்திற்காக அனைத்து நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மார்ச் 12 இயக்கத்தின் அமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் 7, 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நான்கு ஜனாதிபதி வேட்பாளர்களின் பங்கேற்புடன் இந்த விவாதத்தின் முதல் சுற்று எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறும் என்றும், இந்த விவாதத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றுகளில் சுமார் 12 வேட்பாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் மார்ச் 12 இயக்கம் அமைப்பு தெரிவித்துள்ளது.

முதல் நாள் விவாதத்தில் சஜித் பிரேமதாச, நாமல் ரஜக்ஷ, திலித் ஜயவீர, பாக்கிய செல்வம் அரியநேத்திரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அனுரகுமார திஸாநாயக்க பங்கேற்கவுள்ளதை  மார்ச் 12 இயக்கத்தின் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

Popular

More like this
Related

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...

சீரற்ற வானிலை: உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த....