தபால் மூல வாக்களிப்பு: இதுவரையில் 10 மாவட்டங்களில் அனுர அபார வெற்றி

Date:

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள தபால் மூல வாக்களிப்பு முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க முதலிடத்தில் இருக்கின்றார்.

தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின்படி, அவர் 154,657 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அவருக்கு அடுத்தப்படியாக உள்ள சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க 51,982 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 48,970 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இதேவேளை, இதுவரை வெளியாகியுள்ள தபால் மூல வாக்களிப்பு முடிவுகளில் பதினொரு மாவட்டங்களில் பத்து மாவட்டங்களில் அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.

கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தளை, மாத்தறை, மொனராகலை, பொலன்னறுவை, இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அறுரகுமார வெற்றி பெற்றார்.

எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வன்னி மாவட்டத்தில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளார்.

Popular

More like this
Related

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...