மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான புதிய சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு

Date:

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடிகளைக் கொண்ட சிறுவர்களுக்கான புதிய சிகிச்சை பிரிவு கட்டிடம் செவ்வாய்க்கிழமை (03) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தை நிர்மாணிக்க 150 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படையின் திட்ட முகாமைத்துவம் மற்றும் நிர்மாண பிரிவின் கீழ் 10 மாதங்களில் இதன் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

அபேக்ஷா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் சிறுவர்கள் சிலரின் பங்கேற்பில் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால, அபேக்ஷா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரமேஷ் அருண ஜயசேகர உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...