மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான புதிய சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு

Date:

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடிகளைக் கொண்ட சிறுவர்களுக்கான புதிய சிகிச்சை பிரிவு கட்டிடம் செவ்வாய்க்கிழமை (03) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தை நிர்மாணிக்க 150 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படையின் திட்ட முகாமைத்துவம் மற்றும் நிர்மாண பிரிவின் கீழ் 10 மாதங்களில் இதன் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

அபேக்ஷா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் சிறுவர்கள் சிலரின் பங்கேற்பில் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால, அபேக்ஷா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரமேஷ் அருண ஜயசேகர உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...

சீரற்ற வானிலை: உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த....