மூன்றாவது முறையாகவும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வி

Date:

நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்பார்க்கப்பட்டது போல எவரும் 50 வீதம் மற்றும் வாக்கினை பெறாததால் 2ஆவது வாக்கெண்ணும் நடைமுறைக்கு செல்வதென தேர்தல்கள் ஆணையாளர் தேர்தல் சட்டத்தின் கீழ் தீர்மானித்திருக்கின்றார்.

அந்த வகையில் 39 வீதம் பெற்ற அனுரகுமாரவும் 34 வீதம் பெற்ற சஜித் பிரேமதாசவும் போட்டியில் தொடர்ந்து நிலைத்திருப்பர்.

ஏனைய 36 வேட்பாளர்களும் தோல்வியடைந்தவர்களாக கருதப்படுவார்கள் என தேர்தல்கள் ஆணையாளர்கள் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசங்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தவராகக் கருதப்படுகிறார். இது இவர் ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு தோல்விடைகின்ற 3ஆவது சந்தர்ப்பமாகும்.

போட்டியில் தொடர்ந்து இருக்கின்ற சஜித் பிரேமதாசவும் அனுரகுமார திசாநாயக்க இருவருக்குமிடையில் நடைபெறும் விருப்பு வாக்கு இடையில்  விருப்பு வாக்குகளை எண்ணியதன் பின்  இருவரில் அதிக வாக்குகளை பெறும் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவர்.

Popular

More like this
Related

3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு.

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தல் நவம்பர் 28!

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர்...

‘தேசிய தொழுநோய் மாநாடு’ ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்!

நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில்,...

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதிக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதியும் மற்றும் இயக்குநருமான பிலிப் வார்டுக்கும்...