மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமனம்

Date:

இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  புதிய நீதிபதிகளை நியமித்துள்ளார்.

அதன்படி இந்த நியமனங்கள் இன்று (செப்டெம்பர் 06)முதல் நடைமுறைக்கு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளான கே.எம்.ஜி.எச். குலதுங்க (K.M.G.H. Kulatunga), டி.தொட்டாவத்த (D. Thotawatte), ஆர்.ஏ.ரணராஜா (R.A .Ranaraja) மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எம்.சி.எல்.பி. கோபல்லவ (M.C.L.B. Gopallawa) ஆகியோரே புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 107 வது சரத்தின் கீழ் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’  நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று...

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; பெண் பத்திரிகையாளர் உட்பட 5 பேர் பலி.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பெண் பத்திரிகையாளர் உட்பட 5...

கிரிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு மே மாதம் விசாரணைக்கு

கிரிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக...