வத்தளை அல் அஷ்ரபிய்யா பள்ளிவாசலில் “ஸீரதுர் ரஸூல் நிகழ்ச்சிகள் “

Date:

இஸ்லாமிய கலண்டரின் மூன்றாவது மாதமான ரபிஉனில் அவ்வல் மாதம் முஸ்லிம்கள் மத்தியில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களுடைய சிறப்புக்களை அதிகமாக நினைவு கூருகின்ற, அவருடைய வாழ்வியலை பற்றி பேசுகின்ற, கருத்து பரிமாறுகின்ற இன்னோரன்ன பல நிகழ்வுகளை உள்ளடக்கி சிறப்பு பெற்ற ஒரு மாதமாகும்

இந்த புனித மாதத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

வருடாந்தம் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் கூட இது குறித்த அரச மட்டத்திலான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது வழக்கம்.

அந்தவகையில் பல பள்ளிவாசல்களில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் பற்றிய ஸீரத்துர் றஸுல் பற்றின நிகழ்ச்சிகள் அண்மைக்காலமாக பரவலாக இடம்பெற்று வருகின்றமை பாராட்டுக்குரிய விடயம்.

இதன் வரிசையில் கொழும்புக்கு அண்மையில் உள்ள வத்தளை பகுதியில் அமைந்திருக்கின்ற அல் அஷ்ரபிய்யா பள்ளிவாசலில் இந்த மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிகின்ற இந்த ஸீரத்துர் றஸுல் நிகழ்ச்சி பயனுள்ள பல தலைப்புக்களில் சிறப்பான பல மார்க்க அறிஞர்களுடைய வழிக்காட்டலிலே ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பம்மசமாகும்.

இவ்வாறான நிகழ்ச்சிகளினூடாக இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களைப் பற்றிய சிறப்பான சிறந்த விளக்கங்கள் தெளிவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயன் பெறுவது இக்காலகட்டத்திலே மிக முக்கியமானதொன்று என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...